.

Tuesday, December 8, 2015

குழந்தைகளுக்கு இருமல் மருந்து ஏன் தரக்கூடாது ?




குழந்தைகளுக்கு  வரும்  சளி , இருமல் :

           இருமல் என்பது  ஒரு முக்கியமான  பாதுகாப்பு  வழிமுறை ஆகும் , ஏனென்னில் இது  நமது  மூச்சுகுழாயில் தேவையற்ற  தூசு , கிருமிகள்  , நச்சு  நுழைவதை தடுக்கிறது.


  இருமலின்  அடிப்படை :

           காற்று  உள்ளே இழுக்கப்பட்டு , தொண்டை சதைகள்  சுருங்கியபின் அதிக அழுத்தத்துடன் காற்று வெளித்தள்ளி விடுவிக்கபடுகிறது . இதனால்  நுரையீரல்  உள்ளே  தூசு,நச்சு  செல்லாமல் தடுக்கபடுகிறது .

  சுரத்தை போலவே  இருமலும்  நமக்கு நன்மையையே  செய்கிறது . எனவே அளவான  இருமல் நல்லது , இதற்க்கு வைத்தியம் தேவை இல்லை . இருமல் அதிகமாக வந்து மூச்சு விட சிரமம் , தூக்கம் இல்லாமை , தொண்டை வலி போன்றவை வந்தால் மட்டுமே  இருமல் குறைய  syrup எடுத்துகொள்ளவேண்டும் .

சிறு குழந்தைகளின்  இருமலை  முற்றிலும்  நிறுத்தக்கூடாது , ஏனெனில்  இருமல் மூலமே உள்ளே தேங்கும்  சளி  வெளியேறும் .இருமலை  நிறுத்தினால்  அவை  நுரை யில்  சென்று  atelectasis  என்ற  நுரையீரல்  சுருங்கும்  தன்மையை  ஏற்படுத்திவிடும் .

இருமலுக்கான தொடு  நரம்புகள்  காதிலும் உண்டு  , அதனால் தான் காது குடையும் போது  இருமல் வருகிறது .

மருத்துவம் :

  குழந்தைகளுக்கு முற்றிலும்  இருமலை கட்டுபடுத்த  கூடாது
எதனால் இருமல் வருகிறது என்று பார்த்து  அதற்கு வைத்தியம்  செய்ய வேண்டும்

வறட்டு இருமல், தொண்டை வலி இருந்தால்  இருமல் மருந்து தரலாம்

தூக்கம் இல்லாமல் இருமுதல் , பால் குடிக்கமுடியாமல் இருமல் , இருமலின் முடிவில்  வாந்தி   - ஆகிய  நேரங்களில்  மருந்து தரவேண்டும்

மூக்கின்  முன்புறம் நீர் வடிவது போல , மூக்கின் பின் புறமும்  தொண்டையில் நீர் வடியும் இதனால்  இருமல் வந்துகொண்டே  இருக்கும்(postnasal  drip ) . இதற்க்கு  மூக்கு சொட்டு  மருந்து போட்டாலே  இருமல் குறைந்து விடும்.

சைனுசிடிஸ்  என்ற நிலையிலும்  சைனசில்     இருந்து  நீர் , சளி கசிவதால்  தொடர்ந்து  இருமல் இருக்கும் .

வெண்ணீரில் உப்பு  போட்டு வாய் கொப்புளிக்க  வேண்டும்

மூக்கிற்கு  சொட்டு மருந்து  போட்டு வரவேண்டும்
வெநிரில் ஆவி  பிடிக்கவேண்டும் .

எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டுவதை தவிர்க்கவேண்டும் .

எப்பொழுது மருத்துவரை அணுக  வேண்டும் :
 
 சளி மஞ்சளாகவோ , பச்சையாகவோ , கெட்டியாகவோ மாறும்போதும்
 

முச்சு  விடும் வேகம்  அதிகரிக்கும் போதும் - இது வயதிற்கு  ஏற்ப மாறும்.

                பிறப்பு  முதல்  2  மாதம் வரை - > 60  / ஒரு நிமிடம்

                 2  மாதம்  முதல் ஒரு வயது  வரை ->50  /ஒரு நிமிடம்

                  ஒரு வயது மேல் 5  வயது வரை -> 40  / ஒரு நிமிடம்



குழந்தை  அழாமல் உள்ளபோது  குழந்தை  மூச்சு விடும் வேகத்தை  ஒரு முழு நிமிடத்திற்கு  எண்ணவேண்டும். மேலே சொன்ன  அளவை விட அதிகமாக இருந்தால் அது நிமோனியா  சளியின்  அறிகுறியாக இருக்கலாம் .

Disqus Comments