.

Friday, May 1, 2015

சிறுநீரகக் கோளாறு நீங்க , உடல் எடை குறைய வௌ்ளை பூசணி

வௌ்ளை பூசணி


பூச­ணிக்காய் என்­றதும் நமக்­கெல்லாம் திருஷ்டி பொம்மை தான் நினை­வுக்கு வரும். மற்­ற­வ­ரது திருஷ்­டி­களை எல்லாம் தன் மேல் ஏற்­றிக்­கொண்டு உடைந்து சிதறும் அந்தப் பூச­ணிக்­காய்க்கோ, அதை உடைப்­ப­வர்­க­ளுக்கோ அதன் நற்­கு­ணங்கள் தெரிந்­தி­ருக்க வாய்ப்­பில்லை பலரும் அதை ஒரு காயா­கவே மதிப்­ப­தில்லை. உடலை இளைக்கச் செய்­வதி லிருந்து, சிறு­நீ­ரகக் கோளா­று­களை சரி செய்­வது வரை வெள்ளை பூச­ணிக்குள் ஒளிந்­தி­ருப்­பது அத்­த­னையும் அற்­பு­த­மான மருத்­துவக் குணங்­களே!
டயட்­டீ­ஷி­யன்­களின் பேரா­த­ரவு பூச­ணிக்­காய்க்கு எப்­போதும் உண்டு. பருமன் குறைய உதவும் உன்­னத காய் என்­பது அதில் முதல் காரணம் எனப் பெரு­மை­யுடன் ஆரம்­பிக்­கிறார் ஊட்­டச்­சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன். வெண்­பூ­ச­ணியின் நல்ல தன்­மை­களைப் பற்றி அவர் தரு­கிற தக­வல்கள், பூச­ணியின் ருசியைப் போலவே புத்தம் புதுசு. ஆங்­கி­லத்தில் பூச­ணிக்­காய்க்கு ‘ஆஷ் கார்ட்’ என்று பெயர். ஆயுர்­வே­தத்தில் வெண்­பூ­ச­ணிக்கு முக்­கிய இட­முண்டு. அசி­டிட்டி பிரச்­சினைக்கு பூச­ணிக்காய் சாறு மாம­ருந்து.

‘கேஸ்ட்­ரைடிஸ் என்­பது ஒரு­வகை செரி­மானக் கோளாறு (நெஞ்­செ­ரிச்சல்). வயிற்­றி­லி­ருந்து அமிலம் போல ஒரு திரவம் தொண்­டைக்கு வரு­வதை உணர்­வார்கள். இந்தப் பிரச்சினை உள்­ள­வர்­க­ளுக்கு பூச­ணிக்காய் சாறு தீர்வு தரும். பூச­ணிக்­காயை தோலும் விதையும் நீக்கி, அப்­ப­டியே மிக்­ஸியில் அடித்து, 2 நாட்­க­ளுக்­கொரு முறை வீதம், 10 நாட்­க­ளுக்கு வெறும் வயிற்றில் குடித்தால் நிவா­ரணம் தெரியும்.

பூச­ணிக்­காயில் கலோரி குறைவு என்­பதால் எடை குறைக்க நினைப்­போ­ருக்கு மிகவும் சிறந்­தது. கொழுப்­பில்­லாத கார­ணத்­தினால் நீரி­ழிவு பாதித்­த­வர்கள், இதய நோயா­ளி­க­ளுக்குக் கூட இது சிறந்­தது. 100 கிராம் பூச­ணிக்­காயில் இருப்­பது வெறும் 10 கலோ­ரிகள் மட்­டுமே. புரதச் சத்து 0.48 கிராமும், காபோவைதரேட் 1.9 கிராமும், இரும்­புச்­சத்து 0.8 மி.கிராமும், கொழுப்­புச்­சத்து 0.1 கிராமும் மட்­டுமே இருப்­பதால், யார் வேண்­டு­மா­னாலும் சாப்­பி­டலாம்.
96 சத­வி­கிதம் தண்ணீர் சத்து கொண்­டது என்­பது ஹைலைட். சிறு­நீ­ரகக் கோளா­று­களை விரட்டும் குணமும் கொண்­டது. பூச­ணிக்­காயை பச்­சை­யாக எடுத்துக் கொண்டால் சளி பிடிப்­ப­தாக சிலர் கூறுகின்றார்கள். அது நிரூ­பிக்­கப்­ப­டா­தது என்­றாலும், அப்­படி ஒத்துக் கொள்­ளா­த­வர்கள் பச்­சை­யாக சாப்­பிடுவதைத் தவிர்க்­கலாம்.

இத்­தனை நல்ல குணங்கள் இருக்­கிற கார­ணத்­தினால், தின­சரி பூச­ணிக்­காயை உணவில் சேர்த்துக் கொள்­ள­லாமா எனக் கேட்டால், கூடாது என்­றுதான் சொல்வேன். இந்த விதி பூச­ணிக்­காய்க்கு மட்­டு­மல்ல எல்லா காய்­க­றி­க­ளுக்­குமே பொருந்தும். சோறும் பருப்­பையும் தவிர, வேறு எந்த உண­வையும் தின­சரி உண்­பது சரி­யல்ல. இயற்­கையின் படைப்பில் நமக்கு எத்­த­னையோ காய்­க­றி­களும், பழங்­களும் கிடைக்­கிற போது, ஒன்றை மட்­டுமே தொடர்ந்து எடுப்­பது தவறு. அது எத்­தனை சத்­தா­ன­தாக இருந்­தாலும் அப்­ப­டித்தான்...’’ என்­கிற தாரிணி கிருஷ்ணன், பூச­ணிக்­காயை வைத்துத் தயா­ரிக்கக் கூடிய ஆரோக்­கிய ரெசி­பியும் தரு­கிறார்.

பூசணி பத்­தையை நறுக்­கிய பிறகு கழு­வாமல், முழு பத்­தை­யையும் கழுவி விட்டு, பிறகு சின்ன துண்­டு­க­ளாக நறுக்கி சமைக்­கவும். பூச­ணிக்காய் சீக்­கி­ரமே வெந்­து­விடும் என்­பதால் மற்ற காய்­க­றி­களைப் போல நீண்ட நேரம் சமைக்க வேண்­டி­ய­தில்லை. ரொம்­பவும் வெந்­து­விட்டால், அது கரைந்து, கூழாகி விடும். பூச­ணிக்­காய்க்­கென தனி ருசி கிடை­யாது. அத்­துடன் சேர்க்­கிற மற்ற பொருட்­களின் மணத்­தையும் ருசி­யையும் தானும் கிர­கித்து அப்­ப­டியே பிர­தி­ப­லிக்கக் கூடி­யது. எனவே, பூச­ணிக்­காயை சூப், கூட்டு, பாயசம், அல்வா, கிரேவி என எதில் வேண்­டு­மா­னாலும் சேர்க்­கலாம். நறுக்­கிய பூச­ணிக்­காயை ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். ஆனாலும், அதை அதிக பட்சம் 2 நாட்­க­ளுக்குள் பயன்­ப­டுத்தி விடு­வதே நல்­லது.

பூசணித் தக­வல்கள்

மன­நலம் தொடர்­பான பிரச்­னை­களைத் தீர்க்கும் சக்தி கொண்­டதாம் பூசணி. ஆயுர்­வே­தத்தில் மன­நோய்­க­ளுக்­கான மருந்துத் தயா­ரிப்பில் பூச­ணிக்­காயின் பங்கு பிர­தா­ன­மா­னது. வயிற்­றுப்­புண்ணை ஆற்றும் சக்தி கொண்­டது. அல்சர் பாதித்­த­வர்­க­ளுக்கு பூச­ணிக்காய் சாறு கொடுக்கும் பழக்கம் கிரா­மங்­களில் உண்டு.ஆஸ்­துமா போன்ற சுவாசக் கோளா­றுகள், ரத்த தொடர்­பான நோய்கள், சிறு­நீ­ரகப் பாதை தொடர்­பான நோய்கள், சிறு­நீ­ர­கக்கல் போன்­ற­வற்­றுக்கும் பூச­ணிக்காய் பலன் தரு­கி­றது. பூச­ணிக்­காயின் அத்­தனை பகு­தி­க­ளுமே மருத்­துவக் குணம் வாய்ந்­தவை. அடி­பட்ட காயத்தின்
மேல் பூசணி இலையைத் தேய்த்தால் சீக்­கி­ரமே ஆறும். பூசணி விதைக்கு, குடல் புழுக்­களை அகற்றும் சக்தி உண்டாம்.

எப்­படி வாங்­கு­வது?

இப்­போ­தெல்லாம் பூசணி பத்­தை­யாகக் கிடைக்­கி­றது. அதன் சதைப் பகுதி வெள்­ளை­யாக, மஞ்சள் பட­ராமல், நிறம் மாறாமல் இருக்­க­வேண்டும். முழு பூச­ணிக்­கா­யாக வாங்­கு­வ­தென்றால் கெட்­டி­யாக இருக்க வேண்டும். நல்ல கன­மான, அழுத்­த­மான காய் சிறந்­தது.

‘‘டயட்­டீ­ஷி­யன்­களின் பேரா­த­ரவு பூச­ணிக்­காய்க்கு எப்­போதும் உண்டு. பருமன் குறைய உதவும் உன்­னத காய் என்­பது அதில் முதல் காரணம்’’ எனப் பெரு­மை­யுடன் ஆரம்­பிக்­கிறார் ஊட்­டச்­சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன். வெண்­பூ­ச­ணியின் நல்ல தன்­மை­களைப் பற்றி அவர் தரு­கிற தக­வல்கள், பூச­ணியின் ருசியைப் போலவே புத்தம் புதுசு. ‘‘ஆங்­கி­லத்தில் பூச­ணிக்­காய்க்கு ‘ஆஷ் கார்டு’ என்று பெயர்.

ஆயுர்­வே­தத்தில் வெண்­பூ­ச­ணிக்கு முக்­கிய இட­முண்டு.
அசி­டிட்டி பிரச்­னைக்கு பூச­ணிக்காய் சாறு மாம­ருந்து. ‘கேஸ்ட்­ரைடிஸ் ஈஈ­ஸாஃ­பேகல் ரிஃப்ளெக்ஸ் டிசீஸ்’ என்­பது ஒரு­வகை செரி­மானக் கோளாறு (நெஞ்­செ­ரிச்சல்). வயிற்­றி­லி­ருந்து அமிலம் போல ஒரு திரவம் தொண்­டைக்கு வரு­வதை உணர்­வார்கள். இந்தப் பிரச்னை உள்­ள­வர்­க­ளுக்கு பூச­ணிக்காய் சாறு தீர்வு தரும். பூச­ணிக்­காயை தோலும் விதையும் நீக்கி, அப்­ப­டியே மிக்­ஸியில் அடித்து, 2 நாட்­க­ளுக்­கொரு முறை வீதம், 10 நாட்­க­ளுக்கு வெறும் வயிற்றில் குடித்தால் நிவா­ரணம் தெரியும்.

பூச­ணிக்­காயில் கலோரி குறைவு என்­பதால் எடை குறைக்க நினைப்­போ­ருக்கு மிகவும் சிறந்­தது. கொழுப்­பில்­லாத கார­ணத்­தினால் நீரி­ழிவு பாதித்­த­வர்கள், இதய நோயா­ளி­க­ளுக்குக் கூட இது சிறந்­தது. 100 கிராம் பூச­ணிக்­காயில் இருப்­பது வெறும் 10 கலோ­ரிகள் மட்­டுமே. புரதச் சத்து 0.48 கிராமும், கார்­போ­ஹை­தரேட் 1.9 கிராமும், இரும்­புச்­சத்து 0.8 மி.கிராமும், கொழுப்­புச்­சத்து 0.1 கிராமும் மட்­டுமே இருப்­பதால், யார் வேண்­டு­மா­னாலும் சாப்­பி­டலாம்.

96 சத­வி­கிதம் தண்ணீர் சத்து கொண்­டது என்­பது ஹைலைட். சிறு­நீ­ரகக் கோளா­று­களை விரட்டும் குணமும் கொண்­டது. பூச­ணிக்­காயை பச்­சை­யாக எடுத்துக் கொண்டால் சளி பிடிப்­ப­தாக சிலர் சொல்வர். அது நிரூ­பிக்­கப்­ப­டா­தது என்­றாலும், அப்­படி ஒத்துக் கொள்­ளா­த­வர்கள் பச்­சை­யாக சாப்­பிடுவதைத் தவிர்க்கலாம்.
Disqus Comments