.

Friday, April 1, 2016

30 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்



அகத்திக்கீரை- 

ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.
காசினிக்கீரை- சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.

சிறுபசலைக்கீரை- 
சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.


பசலைக்கீரை- 

தசைகளை பலமடையச் செய்யும்.

கொடிபசலைக்கீரை- 

வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.

மஞ்சள் கரிசலை- 

கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.

குப்பைகீரை- 

பசியைத்தூண்டும்.வீக்கம் வத்தவைக்கும்.

அரைக்கீரை- 

ஆண்மையை பெருக்கும்.

புளியங்கீரை- 

சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.

பிண்ணாருக்குகீரை- 

வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும்.

பரட்டைக்கீரை- 

பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.

பொன்னாங்கன்னி கீரை- 

உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும்.

சுக்கா கீரை- 

ரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும்.

வெள்ளை கரிசலைக்கீரை- 

ரத்தசோகையை நீக்கும்.

முருங்கைக்கீரை- 

நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.

வல்லாரை கீரை

மூளைக்கு பலம் தரும்.

முடக்கத்தான்கீரை-

 கை, கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும்.

புண்ணக்கீரை- 

சிரங்கும், சீதளமும் விலக்கும்.

புதினாக்கீரை- 

ரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்.

நஞ்சுமுண்டான் கீரை- 

விஷம் முறிக்கும்.

தும்பைகீரை- 

அசதி, சோம்பல் நீக்கும்.

கல்யாண முரங்கைகீரை- 

சளி, இருமலை துளைத்தெரியும்.

முள்ளங்கிகீரை- 

நீரடைப்பு நீக்கும்.

பருப்புகீரை- 

பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும்.

புளிச்சகீரை- 

கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும்.

மணலிக்கீரை- 

வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும்.

மணத்தக்காளி கீரை- 

வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.

முளைக்கீரை- 

பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.

சக்கரவர்த்தி கீரை- 

தாது விருத்தியாகும்.

வெந்தயக்கீரை- 

மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.

தூதுவலை- 

ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும்.

தவசிக்கீரை- 

இருமலை போக்கும்.

சாணக்கீரை- 

காயம் ஆற்றும்.

வெள்ளைக்கீரை- 

தாய்பாலை பெருக்கும்.

விழுதிக்கீரை- 

பசியைத்தூண்டும்.

கொடிகாசினிகீரை- 

பித்தம் தணிக்கும்.

துயிளிக்கீரை- 

வெள்ளை வெட்டை விலக்கும்.

துத்திக்கீரை- 

வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.

காரகொட்டிக்கீரை- 

மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும்.

மூக்கு தட்டைகீரை- 

சளியை அகற்றும்.

நருதாளிகீரை- 

ஆண்மையைப் பெருக்கும், வாய்ப்புண் அகற்றும்.
Disqus Comments