.

Friday, January 1, 2016

தலைமுடி கொட்டுவது நிற்க மற்றும் பொடுகை போக்க குறிப்புகள்



*முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியைத் தடவினால் முடி வளரும்

* கசகசாவை பாலில் ஊற வைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவைக் கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்கும்.


* நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது; அடர்த்தியாகும்; நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.

* சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்துக் குளித்தால் முடி உதிராது.

* செம்பருத்திப் பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.

* முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிகைக்காய் போட்டு குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.

* வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாதக் காலம் குளித்துப் பார்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும். அது மட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதைத் தடுக்கும். கருகருவென முடி வளரத் தொடங்கும்.

பொடுகு வராமலிருக்க அல்லது பொடுகை அகற்ற சில எளிய முறைகளை கீழே கொடுத்துள்ளோம்.

ஆன்டி செப்டிக் தன்மை நிரம்பிய மூலிகைகளால் உருவான ஆயுர்வேத எண்ணெயை (அதில் வேப்பிலை, வெந்தயம், துளசி ஆகியவை கலந்தது) முடியின் வேரில் மென்மையாக அழுத்தித் தடவவும்.

வென்னீரில் டவலை ஊற வைத்து, பிறகு நீரைப் பிழிந்து விடவும். சீராக நீராவி முடிகளுக்குள் செல்லுமாறு அந்த டவலை தலையில் கட்டவும். 5 லிருந்து 10 நிமிடம் வரை அதை உலர விடவும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் பொடுகு பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
Disqus Comments