.

Tuesday, April 28, 2015

பிளாஸ்டிக் டிபன் பாக்ஸ் – உஷார்…!!!

பிளாஸ்டிக் டிபன் பாக்ஸ்


பெரும்பாலான கல்லூரி மாணவர்கள், தினசரி வேலைக்குசெல்பவர்களுடன் ஒன்றிவிட்டது பிளாஸ்டிக் டிபன் பாக்ஸ்.பார்க்க அழகாகவும், நிறைய வண்ணங்களில் கிடைப்பதாலும், மக்கள் விரும்பி வாங்குகின்றனர்.
நாகரிக முன்னேற்றம் என உண்ணும் உணவில் கூட நஞ்சை விதைகின்றனர் நம் மக்கள்.


ஏன், நம் வீட்டு பிரிட்ஜ்களில் கூட, வண்ண வண்ண பிளாஸ்டிக் பாட்டில்களில், தண்ணீர் நிரப்பி வைத்து, தேவையான நேரத்தில், 'ஜில்' என, தண்ணீர் குடிக்கிறோம். வண்ண வண்ண டிபன் பாக்ஸ், பாட்டில்கள் எல்லாம் பார்க்க பந்தாவாகத் தான் இருக்கின்றன. ஆனால், இதன் பின்னணியில் உள்ள ஆபத்து பற்றி யாருக்கும் தெரிவதில்லை.

கடைகளில் குறைந்த விலை பிளாஸ்டிக் டப்பாக்கள் நிறைய வந்து விட்டன. இவை எல்லாம் தரமானது என, கூற முடியாது. பொதுவாக, பிளாஸ்டிக்குகளில் இருந்து, பி.பி.ஏ., (பிஸ்பீனல்-ஏ- bisphenol-a) எனப்படும், வேதிப்பொருள் உருவாகும். இது, 'ஹார்மோன்' பாதிப்பை ஏற்படுத்தும். நரம்பு சார்ந்த பிரச்னைகளை உருவாக்கும்.

தொடர்ந்து பயன்படுத்துவதால், எடை கூடும், நீரிழிவு பாதிப்பு வரும். குறைந்த வயதிலேயே, பெண்கள் பூப்பெய்தி விடவும் வாய்ப்புள்ளது. 'பெட்' (பாலி எத்திலின் டேரப்தலேட்) பாட்டில் என்கிறோம். இதில், 'டை- எத்தில் - ஹைட்ரக்சில் அமைன் (டேகா) என்ற ரசாயனப் பொருள் கலந்துள்ளது. இது, புற்றுநோய்க்கான வேதிப்பொருள். பாட்டிலை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதாலும், வெந்நீரை ஊற்றி வைத்து பருகுவதாலும், 'டோகா' தண்ணீரில் கலந்து, உடலுக்குள் செல்கிறது; இதுவும் ஆபத்தே. 'பி.பி.ஏ., பாதிப்பு இல்லாத, உணவுப் பொருட்களை வைத்தால், சூடாகாத பிளாஸ்டிக் டப்பாக்கள் (புட் கிரேடு) பயன்படுத்த வேண்டும். டப்பா, பாட்டில்கள் வாங்கும்போது, இதுபற்றிய குறிப்புகள் உள்ளதா என, பார்த்து, தரமானதாக வாங்க வேண்டும்.


சூடான உணவினை இதுபோன்ற டிபன்களில் அடைப்பதனால் சுவையின்
குணமே மாறிவிடுகிறது.

மைக்ரோவேவ் ஒவனில் உணவுகளை சமைப்பதோ, அடிக்கடி பிளாஸ்டிக் கண்டெய்னர்களின் மூலம் உணவுகளை சூடு செய்வதோ, உணவுகளை உண்பதோ பெண்களின் ஈஸ்ட்ரோஜன் சுரப்பில் சிக்கல் எழும் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

“ஃபூட் கிரேடு” என்று பிளாஸ்டிக் வகைகள் இருந்தாலும் அதிலும் உணவுக்கேடு உருவாகும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

எனவே ஆரோக்கியமான உணவும், ஆரோக்கியமான சமையல் முறையுமே ஹார்மோன்களை சரியாக சுரக்கச் செய்யும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

மனிதர்களின் ஆரோக்கியத்தில் ஹார்மோன்களுக்கு முக்கிய பங்குண்டு.
ஹார்மோன்களின் சுரப்பு சமமாக இருந்தால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். அவைகளின் சுரப்பு, குறைவாகவோ, அதிகமாகவோ இருந்தால் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் எண்ணற்ற சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்கின்றனர் நிபுணர்கள்.

சத்தான சரிவிகித உணவு உட்கொண்டால் மட்டுமே ஹார்மோன்களின் சுரப்பை கட்டுக்குள் வைக்கமுடியும். ஈஸ்ட்ரோஜன் எனப்படும் ஹார்மோன் பெண்களுக்கு அவசியமானது.
Disqus Comments