.

Friday, June 13, 2014

தேங்காய் எண்ணெயை கூந்தலுக்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

தேங்காய் எண்ணெயை கூந்தலுக்கு


அக்காலத்தில் எல்லாம் கூந்தலைப் பராமரிக்க தேங்காய் எண்ணெயை பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் தற்போதைய காலத்தில் சுற்றுச்சூழல் மாசுபாட்டினால் கூந்தல் உதிர்தல், பொடுகுத் தொல்லை அதிகரித்து, அவற்றை போக்க கடைகளில் விற்கப்படும் மருந்துகள் கலக்கப்பட்ட எண்ணெய்களை வாங்கிப் பயன்படுத்தி, பின் அந்த எண்ணெயால் மேலும் பல பிரச்சனைகளை சந்தித்திருப்போம்.


சிலருக்கு வழுக்கை கூட ஏற்பட்டுள்ளது. எனவே இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு கண்ட கண்ட எண்ணெய்களை பயன்படுத்துவதற்கு பதிலாக, பாரம்பரியமாக பயன்படுத்தி வரும் தேங்காய் எண்ணெய் கொண்டு கூந்தலைப் பராமரித்தால், கூந்தலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைப் போக்கலாம்.

அதிலும் ஒரு வாரத்திற்கு இரண்டு நாட்களாவது தவறாமல் தேங்காய் எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்து ஊற வைத்து குளித்தால், மயிர்கால்கள் வலுவடைந்து, கூந்தல் சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகளைப் போக்கலாம். இப்போது தேங்காய் எண்ணெயை கூந்தலுக்கு பயன்படுத்தி வந்தால் கிடைக்கும் நன்மைகளைப் பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனிமேல் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தி வாருங்கள்.

தேங்காய் எண்ணெயால் கூந்தலை பராமரித்தால், மயிர்கால்களானது வலுவடைவதுடன், கூந்தல் வளர்ச்சியானது அதிகரிக்கும்.

தற்போது பெரும்பாலானோர் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று கூந்தல் உதிர்தல். இத்தகைய கூந்தல் உதிர்தலைத் தடுக்க, தலைக்கு குளிக்கும் முன் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி நன்கு ஸ்கால்ப்பை மசாஜ் செய்து ஊற வைத்து குளிக்க வேண்டும்.

ஸ்காப்பில் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் பொடுகுத் தொல்லை. இத்தகைய பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபட வாரம் ஒருமுறை தேங்காய் எண்ணெயால் நன்கு மசாஜ் செய்து குளித்து வாருவதுடன், தினமும் தேங்காய் எண்ணெயை தலைக்கு தேய்த்து வாருங்கள். இப்படி தவறாமல் செய்து வந்தால், பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

கூந்தலின் பொலிவை இயற்கையாக அதிகரிக்க வேண்டுமானால், கண்ட கண்ட கெமிக்கல் கலந்த பொருட்களைப் பயன்படுத்தாமல், தினமும் கூந்தலுக்கு தேங்காய் எண்ணெயை தடவி வாருங்கள்.


Disqus Comments