.

Saturday, May 10, 2014

மீன் எண்ணெய் என்றால் என்ன? எதற்கு சாப்பிட வேண்டும்?


மீன் எண்ணெய் என்றால் என்ன? எதற்கு சாப்பிட வேண்டும்? என்ன பலன்?

அனைவருக்குமே உடலை ஆரோக்கியமாக வைக்கும் சிறந்த 5 எண்ணெய் பற்றி தெரியும்.


*************
மீன் எண்ணெயில் நிறைய நல்ல கொலஸ்ட்ரால் இருக்கிறது.  மற்ற எண்ணெய்களை விட, மீன் எண்ணெயை சாப்பிட்டால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் தேங்காமல் இருக்கும்.

ஆனால், நிறைய மக்களுக்கு மீன் எண்ணெய் பற்றிய சரியான உண்மைகள் மற்றும் பலன்களைப் பற்றி தெரியாது. நமது முன்னோர்கள் சொல்வார்கள் என்று தான் இன்றும் சாப்பிடுகிறார்களே தவிர, இதனைப் பற்றி முழுவதும் தெரிந்து சாப்பிடவில்லை.

**மீன் எண்ணெய் என்றால் என்ன?**

இந்த எண்ணெய் பெரியதாக இருக்கும் மீனான திமிங்கலம் போன்றவற்றிலிருந்து எடுக்கப்படுகிறது.  இத்தகைய மீனை சமைத்து சாப்பிடமாட்டோம். ஆனால், இதில் இருந்து தான் வைட்டமின் மாத்திரைகள் தயாரிக்கப்படுகின்றன.
மீன் எண்ணெய் அடைக்கப்பட்ட மாத்திரைகள் மருந்து கடைகளில் கிடைக்கும்.

**எதற்கு சாப்பிட வேண்டும்?**


நம் உடலில் இருக்கும் ‘ட்ரைகிளிசரைடு’ என்னும் கொலஸ்ட்ரால்  இதயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். மீன் எண்ணையில் இருக்கும் ‘ஒமேகா ஃபேட்டி ஆசிட்’,  அந்த ‘ட்ரைகிளிசரைடை’ குறைத்துவிடும். இதனால் இதயதுக்கு பாதிப்பு ஏற்படாமல் தவிர்த்து விட முடியும்.

**உடல் எடையை கட்டுப்படுத்தும்***


சமையல் எண்ணெய்களை அதிகம் உபயோகப்படுத்தினால்,  குண்டாவார்கள் என்று தெரியும். ஆனால், இந்த எண்ணெயை சமையலில் பயன்படுத்தினால், உடல் அதிக எடை போடாமல் பார்த்துக் கொள்ளும்.

**மனசை ரிலாக்ஸ் செய்யும்**


இந்த எண்ணெயை சாப்பிட்டால், மனம் சற்று ரிலாக்ஸ் ஆக இருக்கும். ஏனெனில், இதில் உள்ள உகஅ என்னும் நோய் எதிர்ப்புப் பொருள், மூளையை நன்கு சுறுசுறுப்போடு வைத்திருக்கும். எந்த ஒரு மன அழுத்தமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்.

**மூட்டுவலிக்கு நிவாரணம்**


இந்த எண்ணெயில் உள்ள ‘உகஅ’ உடலில் ஏற்படும் மூட்டு வலிகளை சரிசெயும். மேலும், பெண்களுக்கு உடலில் கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் வலிகளை குறைக்கும். பெண்களின் இடுப்பு எலும்புகள் நன்கு வலுவடைய செய்யும்.

ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த எண்ணெயை சாப்பிட்டால், எந்த ஒரு சுவாசக் பிரச்சனையும் ஏற்படாது.

இந்த எண்ணெயில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் இருப்பதால், புற்றுநோயை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டது.


**கர்பிணிக்கு நல்லது**


முக்கியமாக, இந்த எண்ணெயை கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சாப்பிட்டால், வயிற்றில் உள்ள குழந்தைக்கு கண்பார்வை நன்கு தெரிவதோடு, மூளை வளர்ச்சியும் நன்கு இருக்கும்.

உடலுக்கு மட்டும் ஆரோக்கியத்தை தருவதோடு, சருமம் நன்கு மென்மையாக அழகாக பொலிவோடு இருப்பதோடு, கூந்தலும் பட்டுப் போன்று இருக்கும்.

Disqus Comments