.

Saturday, April 5, 2014

மூல நோய் வகைகள்


மூலநோயைப் பற்றி ஒவ்வொரு நூல்களிலும் அவரவர் கொள்கைப்படி பல வகைகளாக பிரித்திருக்கிறார்கள். சேகரப்பா 254வது பாடலில் மூல நோயை பத்து வகைகளாக தேரர் வகுத்துள்ளார்.

அவையாவன:

சீழ் மூலம்:

மலவாயிலிருந்து வருவது: சீழ்ஒழுகுவது.

புண் மூலம்:

மலவாயிலிருந்து புண்ணீரொழுகுவது.

தீ மூலம்:

மலவாயிலிருந்து சூட்டுடன் எச்சல் கூடி கழிவது.

நீர் மூலம் :

மலவாயிலிருந்து நீர் போலும், பிசுபிசுப்புடனும் தன்னை அறியாமல் வழிவது.

முளை மூலம்:

மலவாயின் அருகில் முளைபோல் உண்டாவது.

சதை மூலம்:

காய்போல முளை கடுப்போடு வெளியா வது.

வெளுப்பு மூலம்:

மோர்போல் வெளுத்து சிறுகச்சிறுக வெளி யாவது.

காற்று மூலம்:

அடிக்கடி காற்று பிவது போல் வெளியாவது.

பெருமூளை மூலம்:

கீழ்க்குடல் கருணைக் கிழங்கின் முளை போல் ஆடுவது.

யூகிமுனி சிந்தாமணி என்னும் நூலில் மூல நோயை இருபத்தோரு பிரிவுகளாக வகுத்துள்ளார்.

அவை:

1. நீர் மூளை மூலம் (நீர் மூலம்)

நீர் மூல நோயில் வயிறு வலித்தல், கீழ் வயிறு இரைச்சல், மலம் வற ண்டு வெளியாகாமல் காற்று மட்டும் பிதல், மலவாயில் நுரையுடன் கூடிய நீர் வழிதல், மலம் வருவது போன்று தோ ன்றும். ஆனால் மலம் வெளிவராமல் நீர் மட்டும் கசியும் தன்மை கொண்டது.

2 செண்டு முளை (செண்டு மூலம்)

செண்டு மூல நோயில் கருணை கிழங்கு முளைவிடும் போது இருக்கும் வடிவமாய் மலவாயி ன் பகுதியில் உண்டாகி சிவந்து, பருத்து வெளியாகும். அதை உள் ளுக்கு தள்ளினாலும் உள்ளுக்கு ப் போகாமல் கடினத்துடன் வற ண்டு கன்றிப் போன நிறத்துடன் மிகுந்த வலி யை உண்டாக்கும். வயிறு இரையும், மலம் கட்டுப்படும் மலவாயில் வலி ஏற்படும்.

3. பெருமுளை (முளை மூலம், பெரு மூலம்)

முளை மூலம் என்னும் பெருமுளை நோயில் மஞ்சளின் முளையைப் போ ல் மலவாயில் தோன்றி எச்சல் உண் டாகி தடித்து அடி வயிறு கல் போலாகு ம். மலவாய் சுருங்கி அப்பு உண்டாகு ம். இந்த மூலநோயில் இரத்தம் வெளி யாகும். வயிற்றுக்குள் காற்றுக்கூடி இரைச்சல், ஏப்பம் இவையுண்டாகும். மலம் காய்ந்து வெளியாகும்.

4. சிறுமுளை (சிற்று மூலம்)

சிற்று மூலம் என்னும் சிறு முளை நோயில் உடலெரியும். மயக்கமுண் டாகும், வயிறு ஊதி பளபளப்பாகும். வயிற்றில் குத்தல், இரைதல், வயி று இழுத்து பிடித்தது போல் வலித்தல் போன்றவை உண்டாகும். உடல் இளைக்கும். சிறிய முளைகள் மலவாயில் உண்டாகும். அதி லிருந்து ரத்தம் வடியும். உடல் வெளுக்கும். பசி குறையும். இது போன்ற அறிகுறிகள் சிறுமூல த்தில் உண்டாகும்.

5. வறள் முளை (வறள் மூலம்)

வறல் மூலநோயில் உடலில் வெப்பம் மிகுந்து குடல் வறட்சியடைந்து மலம் உலர்ந்தும், இறுகியும் மலம் வெளி யாகாமல் தடைப்படும். மலத்தை முக்கி வெளியாக்குகையில் அதனுடன் இரத்த மும் துளிதுளியாக விழும். உடல் வெளு க்கும், பலம் குறையும். இதுபோன்ற அறிகுறிதென் படும்.

6. குருதிமுளை (ரத்த மூலம்)

ரத்த மூல நோயில் தொப்புளில் வலி உண்டாகும். மலம் கழிக்கும்போ தெல்லாம் இரத்தமானது குழாயில் இருந்து பீச்சுவதுபோல் பாயும். உடல் வெளுத்து, பலம் குறைந்து கை கால் உளைச்சல் உண்டாகும். மயக்கம், மார்பு நோய், தலை வலி, கண்கள் மஞ்சள் நிறம் அடைந்து காணப்படும்.

7. சீழ்முளை (சீழ் மூலம்)

சீழ் மூல நோயில் மலவாயை சுற்றிலும் கடுப்பும், எச்சலும் உண்டாகும். மலம் போவதற்குமுன் சீழோடு நீர் வடிந்து பிறகு மலம் கழியும். அதில் இற்றுப்போன சதை துணிக்குகள் காணப்படும். உடல் வெளுத்தும், மஞ்சள் நிறமாயும், உடல் மெலிந்தும் காணப்படும். சிறுநீர் மஞ்சல் நிறமாக வெளியாகும். இதுபோன்ற தன்மைகளை கொண்டதாக இருக் கும்.

8. ஆழிமுளை (ஆழி மூலம்)

ஆழி மூல நோயில் மலவாயில் வள்ளிக்கிழங் கைப் போன்று பருத்து நீண்டு, ஒரே முளை யாய் தோன்றும். அதை உள்ளுக்குத் தள்ளினாலும் செல்லாது. அதிலிருந்து நீரும், சீழும், இரத்தமு ம் வடியும். மலம் வெளியாகாது. மலம் தடை ப்பட்டு தாங்க முடியாத வலி உண்டாகும். இது போன்ற அறிகுறிகள் ஆழிமூல நோயில் காண லாம்.

9. தமரகமுளை (தமரக மூலம்)

தமரக முளை நோயில் மலவாயிலில் முளை வெளியே தோன்றி தாம ரைப் பூப் போல பெதாய் காணும். ரத்தம் அதிகமாய் வெளியாகும். அரிப் பும், நமைச்சலும் உண்டாகும். உடல் மெலியும், மேல் மூச்சு வாங்கும், அசதியும் உண்டாகும். செரியாமை, வயிறு ஊதல், நீராக கழிதல், பசியி ன்மை போன்ற தன்மைகள் இந்நோயில் உண்டா கும்.

10. வளிமுளை (வாத மூலம்)

வாத மூல நோயில் மலவாய் கோவைப்பழம் நிறத்தில் சிவந்தும் அதில் மூல முளைகள் வளர்ந்து கருத்து, மெலிந்து கடுப்பு, நமைச்சல், குத்தல் இவைகள் உண் டாகும். தலை நோகும், குடலுக்குள் வலிக்கும். இது போன்றவை இவ்வகை மூலத்தின் அறிகுறிகள் ஆகும்.

11. அழல் முளை (பித்த மூலம்)

பித்த மூலத்தில் மலவாயில் பருத்திக் கொட் டை போலும், நெல்லைப் போலும் அளவுள்ள முளைகள் தோன்றும். உடலில் பித்தம் மிகுதி யாகி மலம் வறண்டு, உருண்டும், தித்தியாகவும் வெளியாகும். இரத்தமும், சீழும் வடியும். வயி ற்றுவலி, மலவாய்க்கடுப்பு, தலைநோய், கோப ம் உடல் பலம் குறைதல் போன்றவை உண்டா கும்.

12. ஐயமுளை (ஐய மூலம்)

ஐயமூல நோயில் மலவாயில் வெண்மையான முளை தோன்றும். அதில் எந்நேரமும் எச்சல், கடுப்பு உண்டாகு ம். சீழும், தண்ணீரும் கலந் தாற்போல் மலம் கழியும். சிறுநீர் சூடாய் வெளியேறும். தாது நஷ்டம் உண்டாகும். உடல் வெளுக்கும். இதுபோன்ற அறிகுறிகள் தென்படும்.

13. முக்குற்ற முளை (தொந்த மூலம்)

தொந்த மூல நோயில் மலவாய் இறுகி முளையானது கோழிக் கொண்டையை அவ்விடத்தில் பதித்து வைத்ததுபோல் இருக்கும். நடக்க முடியாது. வயிறு முழுவதும் ஒருவித வலி உண்டாகும். உடல் வியர்க்கும். நடுக்கம், நீர் வேட் கை, கழிச்சல் உண்டாகும். உடல் இளைக்கும். இவை போன்ற அறிகுறி கள் இந்த நோயில் உண்டாகும்.

14. வினை முளை (வினை மூலம்)

வினை மூல நோயில் உணவு செயாமை, புளி யேப்பம், அடிவயிறு குத்தல், வயிறு இரைதல், கோபம், மலம் கட்டுதல் ஆகியவை உண்டாகு ம். மேலும் கை, கால் உளைச்சல், கடுப்பு, உடல் காந்தல் முதலிய அறிகுறிகள் வினை மூல நோயில் உண்டாகும்.

15. மேகமுளை (மேக மூலம்)

மேக மூல நோயில் ஆண் குறியில் வெள்ளை விழும். முளையிலிருந்து இரத்தம் கசியும். வயிறு இரைந்து பேதி யாகும். சிறுநீர் எரிச்சலுடன் வெளியா கும். தலைவலியும், உடலில் திமிரும் உண்டாகும். சிறுநீர் இனிப்பு பொருந்தி யதாக இருக்கும். இதுபோன்ற குணங் களை கொண்டி ருக்கும்.

16. குழி முளை (பவுத்திரம்)

குழி முளை மூலநோயில் எருவாயின் முளைக்கு பக்கத்தில் சிறு கட்டி யைப் போல் தோன்றி உடையும். உடைந்து எளிதில் உலரா து. புடம் வைத்ததுபோல் உள்ளே துளைத்துக் கொ ண்டு போகும். சீழும் கசி யும். கை, கால்களை வீங் கும் பவுத்திரம் உண்டாகு ம். முளையானது சேவல் கோழியின் கொண் டையைப்போன்ற வடிவம்போல் சிவந்து காணப்படு ம். இதுபோன்ற அறிகுறிகள் பவுத்திர மூலநோய்க்கு உரியவையாகும்.

17. கழல் முளை (கிரந்தி மூலம்)

கழல் முளை நோயில் ஆண் குறியில் புண் உண்டாகி மலவாய் வரையில் பரவி அதிலிருந்து முளைகள் உண்டாகும். சீழும் இரத்தமும், நீரும் கலந்து வடியும். எச்சலும், கடுப்பும் உண்டாகும். கை, கால்கள் கடுக்கும். மலம் வறண்டு கெட்டியாகும். மலவாய் வெடித்து மல மிறக்கும். இந்த அறிகுறிகள் கிரந்தி மூலநோய்க்கு உய தாகும்.

18. அடித்தள்ளல் முளை (குத மூலம்)

அடித்தள்ளல் மூலநோயில் மலவாயி லில் மூங்கில் குருத்தது போல் தடித்து அடிக்குடல் வெளியாகித் தோன்றும். அதை உள்ளே தள்ளினால் போகும். சிலருக்கு மீண்டும் வெளியே வரும். சீழும் இரத்தமும் வடியும். வயிறு உப்பு சம் உண்டாகும். நாவறண்டு நீர் வேட் கை உண்டாகும். தொடைகள் வலிக்கு ம். இவைபோன்ற அறிகுறிகள் குதமூல நோயில் உண்டாகும்.

19. வெளிமுளை (வெளிமூலம்)

வெளிமூல நோயில் மலவாயில் சிறு பருக்களைப்போன்ற முளை வெளிப் புறமாய் தோன்றும். எண்ணெயைப் போலும், தண்ணீர் போலும் கடுப்புடன் சீழ்கசியும். அரிப்பு, எரிச்சல் ஆகியவை உண்டாகும். உடம்பி ல் சொறி, சிரங்கு உண்டாகும். புறமூலநோயில் இவ்வறி குறிகள் உண் டாகும்.

20. சுருக்கு முளை (சுருக்கு மூலம்)

சுருக்கு மூல நோயில் மலவாய் சுருங்கி தடிப்பு உண் டாகும். பெருங்குட ல் வலியுடன் உப்பும், மலத்துடன் இரத்தமும், நீரும் வெளியாகும். உடல் வெப்பம் கொ ண்டு வெளுக்கும். உடல் சிறுக்கும். மயக்க முண் டாகு ம். இதுபோன்ற அறிகுறிகள் சுருக்கு மூலத்தில் உண் டாகும்.

21. சவ்வு முளை (சவ்வு மூலம்)

சவ்வு மூலநோயில் மலவாயிலில் முளையானது நீண்டு ஜவ்வு போல் கீழே தொங்கும். சீழும் இரத்த த்தோடு நீரும் கசியும். அடிவயிறு நொந்து எயும். இதுபோன்ற அறிகுறிகள் சவ்வு மூல நோயில் உண்டாகும்.

இந்த 21 வகையான மூல நோய்களில் 12 வகையான நோய்கள் எளிதில் தீரக்கூடியவை.

1. நீர் மூளை
2. பெருமுளை
3. வறல் முளை 
4. குருதி முளை
5. வளி முளை
6. தீமுளை
7. மேக முளை
8. குழி முளை,
9. கழல் முளை
10. புறமுளை
11. சுருக்கு முளை
12. சவ்வு முளை,

மேற்காணும் யாவும் எளிதில் தீர க்கூடியவை.

1. செண்டுமுளை
 2. சிறு முளை
3. சீழ் முளை,
4. ஆழி முளை
5. வினை முளை
6. ஐயமுளை
7. குதமுளை
8. முக்குற்ற முளை
9. தமரச முளை

போன்ற மேற்காணும் மூலங்கள் எளி தில் தீராதவையாகும்.
ஒவ்வொரு வகையான மூலத்திற்கும் மருந்து களை சித்தர்கள் தங்களது பாடலின் மூலம் எழுதி வைத்து சென் றுள்ளனர். தேர்ந்த, தகுதியான மருத்துவரை அணுகி மருந்து பெற்று மூல நோயில் இருந்து முற்றிலு மாக குணம் பெற முடியும்.
Disqus Comments