.

Saturday, November 21, 2015

நிலவேம்பு கஷாயம் செய்வது எப்படி?அதன் பலன்கள் என்ன?




டெங்கு, சிக்குன் குன்யா, பன்றி காய்ச்சல், பறவை காய்ச்சல் எனப் புதுப்புது வைரஸ் காய்ச்சல் வகைகள் பெருகிவருகிறது.  டெங்கு, சிக்குன் குன்யா, பன்றிக்காய்ச்சல் போன்ற காய்ச்சலை கட்டுப்படுத்தவும், அழிக்கவும் சித்தர்கள் அறிமுகப்படுத்திய நிலவேம்புக் குடிநீர், அனைத்து வகையான காய்ச்சல்களையும் தீர்க்கவல்லது.



நிலவேம்பு கஷாயம் :
9 வகை மூலிகைகள் அடங்கிய மருந்தாகும்.
தேவையான மூலிகைகள் :

(சிறியாநங்கை) நிலவேம்பு,
வெட்டிவேர்,
விலாமிச்சம் வேர்,
பற்படாகம்,
பேய்புடல்,
கோரைக் கிழங்கு,
சந்தனச்சிறாய்,
சுக்கு,
மிளகு

செய்முறை :

 மேலே உள்ள 9 மூலிகைகளை நன்கு உலர வைத்து சம அளவில் கலந்து, அரைத்துப் பொடியாக்கிக்கொள்ள வேண்டும்.


கஷாயம் தயாரிக்கும் முறை: ஒரு ஸ்பூன் பொடியில் 200 மி.லி. தண்ணீர்விட்டு நன்றாக கொதிக்கவிடவும். நீர் 50 மி.லி.. அளவாக வற்றியவுடன் இறக்கி, வடிகட்டவும். மிதமான சூட்டில் பருகவேண்டும்.

எத்தனை வேளை, யாரெல்லாம் சாப்பிடலாம்?

வாரம் இருமுறை (சனிக்கிழமை / புதன்கிழமை) இந்த கஷாயத்தை செய்து சாப்பிடவேண்டும்.
சர்க்கரை நோய் இருப்பவர்கள் வாரம் இருமுறை ஆண்டு முழுவதும் குடித்துவர, சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
காய்ச்சல் இருப்பவர்கள் நாள் ஒன்றுக்கு 4 முறை குடிக்கலாம்.

பலன்கள்: 

* மூட்டு வலி, உடல் வலி வராது.
* சர்க்கரை நோய் வராமல் தடுக்கும்.
* மழைக்காலங்களில் ஏற்படக்கூடிய டெங்கு, காய்ச்சல் மற்றும் இதரப் பிரச்னைகள் வராமல் தடுக்கும்.
* உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.


குறிப்புகள்:

* கஷாயத்தை செய்து வைத்து நான்கு மணி நேரத்துக்குள் பயன்படுத்திவிடவேண்டும். இல்லையென்றால் பலன் தராது.
* 10 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொடுக்கலாம்.
* மருத்துவரின் முறையான ஆலோசனையின்றி மழலைகளுக்கு கொடுக்கக்கூடாது.
Disqus Comments